Friday, November 20, 2015

காத்திருப்போம்...

விழி திறந்து காத்திருப்போம்...
---------------------------------------

வானில் நிலாவை அங்கு உன்னில் நான் ....

பூமியில் பூங்கொத்தாய் இங்கு என்னில் நீ...

முகம் பார்த்து காத்திருப்போம் .. நம்மை இணைக்கும் வானவில்லிற்காக .....

இந்தக் காதல் எந்த வகை?


இந்தக் காதல் எந்த வகை?
-----------------------------------
அமாவசை இரவினிலே நான் நிலவை பார்த்து சிரிகின்றேன் ...

தனியாய் இருக்கும் போதினிலும் நான் காற்றை பார்த்து விளிகின்றேன் ...

சுடும் என்கிற எண்ணம் இன்றி நான் தீக்குள் விரலை வைக்கின்றேன்....

உடலில் காயம் பட்டால் கூட ரத்தம் பார்த்து ரசிகின்றேன்..

என் உள்ளம் தன்னை பறித்த பூவே உன் உள்ளம் தன்னை திருப்பி கொடு ...

மற்ற மனிதர் எல்லாம் போல என்னயும் நீ வாழவிடு .....

பல நாளாய் என்னுள் ஓர் ஆசை உண்டு ...



பல நாளாய் என்னுள் ஓர் ஆசை உண்டு ...
------------------------------------------------------

நள் இரவில்  நிலவின் முகம் பார்த்து உன் கருவழகு கூந்தலின் நுனி எங்கே என்று வினவ.. 
பல நாளாய் என்னுள் ஓர் ஆசை உண்டு ...

சிறகடிக்கும் வண்ணத்து பூச்சியிடம் ..உன் சிறகின் வண்ணம் ஓர் நாள் நான் அணிய  தவணையில் தாராயோ என்று வினவ... 
பல நாளாய் என்னுள் ஓர் ஆசை உண்டு ...

சில்லென்று வீசும் பூங்கற்றிடம் ...   என் செவி சாய்க்கும் மெல்லிசையை நீ யாரிடம் பயின்றயோ என்று வினவ
பல நாளாய் என்னுள் ஓர் ஆசை உண்டு ...

நீர் வாழும் முதலை கண்டு ..அன்பாய் அதனை முத்தமிட்டு ..இனி மானிடரும் மாமிசமும் விடுத்தது பச்சை பயிருண்டு வாழ்வையோ என்று வினவ...
பல நாளாய் என்னுள் ஓர் ஆசை உண்டு ...